புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளும்பில் இருக்கும் இந்தோனேசிய கோவி!
Hey guys! இன்னைக்கு நாம இந்தோனேசியா ல இருக்கிற ரெண்டாவது பெரிய புத்தர் கோவிலுக்கு தான் போய் பார்க்க போறோம். இது ஒரு ரொம்ப பெரிய கோவில். ஆனா இங்க யாருமே வரதில்ல. இந்த கோவில "சண்டி சேவு" ன்னு சொல்றாங்க. அதுக்கு ஆயிரம் கோவில்கள் இருக்கிற இடம் ன்னு அர்த்தம். இது தன்னோட பழங்கால ரகசியங்களுக்கு பேர் போனது. வாங்க! உள்ள போயி அங்க என்ன இருக்கு இ ன்னு பார்ப்போம்! நாம உள்ள நடந்து போகும்போது," துவார பாலகர்கள்" ங்கர இந்த ரெண்டு பிரம்மாண்டமான வாயில் காப்போர்களோட சிலைகள் தான் நம்மள வரவேற்குது. இந்த சிலைகள் ரொம்ப பெருசா ஏறத்தாழ 10 அடி உயரத்துக்கு மேலேயே இருக்கும். இது வாசலோட இடது பக்கத்தில் இருக்கிற வாயில் காப்பவர், அதாவது துவாரபாலகர். இவரு ரொம்ப பெருசா இருக்காரு பாருங்க! கிட்டத்தட்ட பத்து அடி உயரம் பக்கமா இருக்காரு. அவரோட கடா மீசைய பாருங்களேன்!
அவரோட வாய்க்குள்ள நீங்க பார்த்தா கோரைப்பற்கள் வெளியே நீட்டிக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும். அவரோட கண்கள் ரெண்டும் வெளிய பிதுங்கி கிட்டு இருக்கு. ஏன்னா, எப்பவுமே அவரு கோபமா வே தான் இருக்காரு. அவரோட கையில "கதை" ன்னு சொல்ற ஒரு ஆயுதத்தை புடிச்சுகிட்டு இருக்காரு. அது ரொம்ப மிருகத்தனமா தாக்கக் கூடிய ஒரு பயங்கரமான ஆயுதம். அப்புறம் அவரு இந்த sacred thread அ போட்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, இது ஒரு sacred thread தானா?! இல்ல. Actual ஆ அவரு, ஒரு பாம்ப தான் கையில குறுக்கால போட்டு இருக்கார். பாருங்க!! மறுபடியும் பாம்பையே நகையாவும் போட்டுக்கிட்டு இருக்காரு. இப்ப நாம, இந்த பக்கம் இருக்கிற துவார பாலகர பாக்கலாம் வாங்க. இங்க நமக்கு என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். இப்ப, இந்த பக்கத்துலயும் மறுபடியும் கோரை பற்களோடயும், பெரிய கடாசையோடயும் ஒரு துவார பாலகர நாம பார்க்கலாம். ஆனா அவரோட sacred thread அ பாருங்களேன்!! இங்க நீங்க, பாம்போட தலைய கூட பார்க்கலாம். கையிலயும் பாம்ப பார்க்கலாம். எப்படி இவரும் அந்த பாம்ப நகையா போட்டுக்கிட்டு இருக்காருன்னு பாருங்களேன்!!!
இங்க பாருங்க! இன்னொரு பாம்பு! கையில இன்னொரு பாம்ப புடிச்சுகிட்டு இருக்காரு. அந்த பாம்பு அவருக்கு பின்னால தன்னோட படத்த விரிச்சுக்கிட்டு இருக்கு. இங்க, நீங்க ஒரு interesting ஆன விஷயத்த பார்க்கலாம். அவரு ஒரு" கதை" ங்குற ஆயுதத்த மட்டும் கையில புடிச்சுகிட்டு இருக்கல, உறைல போடப்பட்ட ஒரு வாளயும் வச்சிருக்காரு. இந்த பூ design அயும் இங்க பார்க்கலாம். அதுவும் இல்லாம, அவரோட குதிகால்கள்ல, உடலமைப்போட துல்லியமாக பொருந்துற மாதிரி இருக்கற இந்த சின்ன சின்ன details களயும் பார்க்கலாம். இப்ப சண்டி அப்படிங்கறதுக்கு என்ன அர்த்தம் ?சண்டிங்கிற வார்த்தை கோவில் ங்கிறத மட்டும் தான் குறிக்கும். சேவுங்குற வார்த்தைக்கு ஆயிரம் ன்னு அர்த்தம். So, இந்த இடிபாடுகள முத முதல்ல கண்டு பிடிச்சப்போ, உள்ளூர் காரங்க இதுக்கு "ஆயிரம் கோவில்களோட இருக்கிற கோவில் வளாகம்" ன்னு அர்த்தம் வர மாதிரி பேரு வச்சாங்க. இந்த கோவிலோட main கடவுள் யாரு? இந்த கோவில் complex ஓட main கடவுள் யாருன்னு போய் பாக்கலாம் வாங்க! இந்த கடவுள் யாரு?
இவரு சிவபெருமானா? புத்தா? இல்ல, மகாவீரரா? இல்லாட்டி, இயேசுவா கூட இருக்கலாமா? இல்ல, வேற ஏதாவது கடவுளா இருக்குமா? யார் இவரு? இது யார் ன்னு உங்களால guess பண்ண முடியுதா ? இந்த சிலைய அடையாளம் கண்டுபிடிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஏன்னா, முகம் தானே நம்ம எல்லாருக்கும் அடையாளம்?! தலையவே வெட்டிட்டா இவர யாருன்னு எப்படி கண்டு பிடிக்கிறது ? ஆனாலும், இவரு புத்த பகவான் தான் ங்கறது நமக்கு தெரியுது. அவரோட, உட்கார்ந்து இருக்கிற posture அயும் அவரோட கைகளோட முத்திரைகளயும் வச்சு, நாம அவர அடையாளம் கண்டு பிடிச்சுக்கலாம். இந்தோனேசியா ல இருக்கற நிறைய பேரு, இந்த தல இயற்கையாலதான் அழிக்கப்பட்டிருக்கு அப்படின்னு சொல்றாங்க. ஆனா, இயற்கை இந்த மாதிரி எல்லாம் வேல பண்ணாது. இயற்கை, எல்லாத்தையும் Even ஆ தான் அழிக்கும். தலைய மட்டும் எல்லாம் வெட்டி எடுக்காது.
Praveen Mohan Tamil















